சென்னை, ஆக. 1- புனித ஹஸ் பயணத்துக்காக இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4,464 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையிலிருந்து சவூதிஅரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். முதல் விமானத்தில் 213 பெண்கள் உள்பட 423 பேர் பயணம் செய்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். புனிதஹஜ் பயணத்துக்கு சென்றவர்க ளை தமிழக ஹஜ் கமிட்டித் தலைவர் அப்துல் ஜப்பார் வழியனுப்பி வைத்தார். சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு பகுதியில் விமானங்களில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் வரு வதால் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஹஜ் பயணிகள் எந்தவித சிர மமும் இன்றி செல்ல ஏற்பாடுகள் செய் யப்பட்டு உள்ளன. சென்னையிலிருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5 ஆம்தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப் படுகிறது.