weather

img

தென் தமிழகத்தில் நாளையும் கனமழை பொழியும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

சென்னை
தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மதுரையில் சுமார் 1 மணிநேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது.
இந்நிலையில், நாளையும் (செவ்வாயன்று) தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை அறிவு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

;