வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
அடுத்த 12 மணிநேரத்தில் அரபிக் கடலிலும், அக்.22 வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.
அதேபோல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக். 20 ஆம் தேதி உருவாகும் வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.