weather

img

குறைந்த அழுத்தம் புயலாக வாய்ப்பு.... கேரளத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு....

திருவனந்தபுரம்:
வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த அழுத்தத்தால் கேரளா பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், விழிப்புடன் இருக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு புயலுக்கான வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1 முதல் கடல் கரடுமுரடானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

திங்கள் நள்ளிரவுக்குப் பிறகு கடலுக்குச்செல்ல வேண்டாம். மீன்பிடிக்கச் செல்வோர் திங்கள்கிழமை நள்ளிரவுக்குள் அருகிலுள்ள பாதுகாப்பான கரையை அடைய வேண்டும். புதன்கிழமை இடுக்கிக்கு சிவப்பு எச்சரிக்கை (அதிதீவிர மழை) விடுக்கப்பட்டது. புதனன்று திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

;