technology

img

ஊழியர்களுக்கு இடையிலான சாதிப் பாகுபாட்டை ஆதரிக்கும் கூகுள் - ஈக்குவாலிட்டி லேப் அமைப்பு அறிக்கை  

கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு இருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவிலுள்ள கூகுள் நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் ஈக்குவாலிட்டி லேப் என்ற அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர், தேன்மொழி செளந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சாதி, சமத்துவம் குறித்து சிறப்புரையாற்றுவதாக இருந்தது. அதற்கு கூகுள் நிறுவன ஊழியர்கள், மூத்த அதிகாரிகள் சிலர் கண்டனம் தெரிவித்த நிலையில், கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கூகுள் நியூஸ் பிரிவின் திட்ட மேலாளர் தனுஜா குப்தாவிடம் கூகுள் நிறுவனம் விசாரணை நடத்தியது. இதையடுத்து, தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, நான் இந்த நிறுவனத்தில் 11 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். இந்த நிறுவனத்தில் நிறம் காரணமாக நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். மேலும், ஊழியர்களுக்கு இடையிலான சாதிப் பாகுப்பாட்டை கூகுள் ஆதரிப்பதாக தனுஜா குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தனுஜா குப்தாவுக்கு ஆதரவாக ஈக்குவாலிட்டி லேப் அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில் கூகுள் நிறுவனத்தின் இந்த செயல், சட்ட விரோதம். உரையை ரத்து செய்ய முயன்ற ஊழியர்களின் சாதிவெறியை கூகுள் ஆதரிக்கிறதா?  

தமிழ்நாடடில் பிறந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு சாதிப் பாகுபாடு பற்றியெல்லாம் எதுவும் தெரியாதா என விமர்சனத்தை முன் வைத்துள்ளது.