வாட்ஆப்பில் 2ஜிபி அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 எம்பி அளவுள்ள கோப்பு மட்டுமே வாட்ஸ்ஆப்பில் பகிரமுடியும் என்கிற நிலையே நீடித்து வருகிறது.
இந்தநிலையில் விரைவில் 2ஜிபி அளவிலான பெரிய கோப்பை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனைதொடர்ந்து சோதனை முயற்சியாக முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதனை செய்தபின், அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.