செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் திங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டங்களில் மாவட்டம் முழுவதுமிருந்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைக்ளை கூறுவர். இந்நிலையில் மருத்துவக்கல்லூரி நுழைவாயில் இரும்புக் குழாய்கள் கொண்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் கால்கள் இரும்பு குழாய்களுக்கு இடையில் மாட்டிக் கொள்வதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.