செங்கல்பட்டு: 53 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1223ஆக உயர்ந்துள் ளது. தற்சமயம் மருத்துவமனைகளில் 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்: 10 பேருக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 10 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 416ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 250 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூரில் 4 பேருக்கு கொரோனா தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 611 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.மலையில் தொற்று 429
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கட்கிழமை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.
தந்தை கொலை:மகன் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விசூர் காலனியை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன் தினசரி குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அவரது அலெக்ஸ் பாண்டியன் தந்தையை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ்பாண்டியனை கைது செய்துள்ளனர்.