tamilnadu

img

மாதர் சங்க மூத்த தலைவர் தோழர் திலகவதி காலமானார்

மதுராந்தகம், மே 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மூத்த தலைவர்க ளில் ஒருவருமான தோழர் திலகவதி உடல் நலக்குறை வால் திங்களன்று (மே 11) காலமானார். அவருக்கு வயது 70. இவர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் செய லாளரும் விவசாய சங் கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்களில் ஒருவரு மான டி. கிருஷ்ணராஜின் மனைவி ஆவார். நெஞ்சுவலி காரணமாக ஞாயிறன்று (மே 10) இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திலகவதி அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை பல னின்றி திங்களன்று மதியம் மரண மடைந்தார். ஓய்வு பெற்ற ஆசிரி யரான திலகவதி, அனைத் திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் ஒன்றுபட்ட காஞ்சி புரம் திருவள்ளூர் மாவட் டத்தின் செயலாளராகவும், ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி யாகவும், மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்களில் ஒருவ ராகவும் பணி யாற்றியவர். மதுராந்தகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. சங்கர், மாநிலக் குழு உறுப்பி னர் வா.பிரமிளா, மதுராந்த கம் வட்ட செயலாளர் கே. வாசுதேவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வுகள் செவ்வாயன்று (மே 12) காலை 9 மணி அள வில் நடைபெற உள்ளது.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
தோழர் திலகவதி மறை வுச் செய்தி அறிந்து அதிர்ச்சி யும், இரங்கலும் தெரிவித் துள்ள கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், தோழர் திலகவதி மறை வால் துயருற்றுள்ள தோழர் டி.கிருஷ்ணராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான அனு தாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
என்.சங்கரய்யா இரங்கல்
தோழர் திலகவதி மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளார். டி. கிருஷ்ணராஜ் - திலகவதி தம்பதியரின் உணர்வுப் பூர்மான கட்சிப் பணியை நினைவுகூர்ந்துள்ள சங்க ரய்யா, அவர்களது மகன் களுக்கு தனது தலைமை யில் திருமணம் நடந்த நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்து, தோழர் திலகவதி மறைவுக்கு ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.