மதுராந்தகம், ஆக. 4- கொரானா தொற்று பேரிடர் காலத்தை பயன்படுத்தி மதுராந்த கம் நகராட்சி ஆணையர் பல லட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளார். எனவே, அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுராந்த கம் வட்டச் செயலாளர் கே.வாசு தேவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது: கொரானா தொற்று பரவாமல் இருக்க செய்ய வேண்டிய அடிப்படை யான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் நகராட்சி ஆணையர் வ.நாராயணன் ஊழல் செய்திருப்பதாக நகர மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். இதுதொடர்பாக கட்சிக்கு புகார் கடிதம் வந்ததுள் ளது. கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட ஒவ்வொரு தெருவிலும் தடுப்பு அமைக்க வேண்டும். மாறாக, ஒரு சில இடங்களில் தடுப்பு கள் அமைத்துவிட்டு மீதமுள்ள இடங்களில் தடுப்பு அமைத்தாக கூறி பணம் எடுத்துள்ளனர். ஊரடங்கு அறி விப்பை அறிவிக்க 5 நாட்கள் மட்டும் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய் துள்ளனர். ஆனால், மூன்று மாதத் திற்கு மேல் வாகனம் மூலம் ஒலி பெருக்கி பிரச்சாரம் செய்ததாக பணம் எடுத்துள்ளனர். நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் 5 வண்டிகள் மூலம் 15 நாட்கள் மட்டுமே காய்கறி, பொருட் களை விநியோகம் செய்துள்ளனர்.
மாறாக, தினந்தோறும் 10 வண்டி வீதம் 60 நாட்களுக்குக் காய்கறி வழங்கியதாகவும் பணம் எடுத்துள்ள னர். கிரிமி நாசினி தெளிக்க நகராட்சி வண்டியை பயன்படுத்திவிட்டு, நாளொன்றுக்கு 5 வாடகை வண்டி மூலம் 51 நாட்கள் பணி செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர். சுகாதார பிரிவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியாளர் களுக்கு ஒரு மாதம் சம்பளத்தை வழங்காமல், 15 நாட்களுக்கான ஊதி யத்தை மட்டுமே வழங்குகின்றனர். குடிநீர் பிரிவு ஊழியர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கவில்லை. மாறாக, ஒப்பந்ததாரரிடம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுத்தால்தான் ஊதியம் வழங்கப்படும் என்று ஆணையர் நிர்ப்பந்தித்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒப்பந்த தாரரிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்த பிறகே ஊதியம் வழங்க படுவதாக கூறப்படுகிறது. நகரப் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்க ளுக்குச் செல்லும் ஆணையர், தனது ஜீப் ஓட்டுநர் மூலம் பணி செய்ப வர்களை மிரட்டி தளவாடப் பொருட் களை ஜப்தி செய்கிறார். ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்ட பின்னரே பணிகளை செய்ய அனுமதிப்பதாகவும் தெரி கிறது. எனவே, நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றுவரும் ஊழல் குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். மக்களின் நன்ம திப்பை இழந்துள்ள நகராட்சி ஆணை யர் வ.நாராயணன் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். மக்க ளின் நலன் கருதி விரைவில போராட் டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.