செங்கல்பட்டு, ஆக.20- காஞ்சிபுரம் மாவட்டத்தி ற்குட்பட்ட சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர் சாலை, செங்கல்பட்டு திருப்பெரும்புதூர் உள்ளிட்ட சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான கால்நடைகள் 24 மணி நேரமும் சுற்றித் திரிகின்றன. கால்நடைகள் சாலை யின் நடுவிலேயே படுத்துக்கிடப்பதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதுடன், உயிரிழப்புக்களும் ஏற்படு கின்றன. எனவே சாலை களில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ள னர். காஞ்சிபுரம் மாவட்டம், விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் மாவட்டமாக அரசால் கருதப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்தபோது நெடுஞ்சாலை களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஒரு பகுதி விபத்து ஏற்படுவது தெரியவந்துள்ளது. எனவே கால்நடைகளைச் சாலைகளில் விட்டால் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, பொது ஏலத்தில் விடப்படும். மேலும் கால்நடை உரிமை யாளர் மீது குற்றவியல் நட வடிக்கையும் மேற்கொள்ள ப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்திருந்தார்.ஆனால், இதை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாகத் தெரிய வில்லை என பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.