செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் இயற்கை உரம் தயாரிப்பு பணியினையும், மாடித்தோட்டம் மூலம் வளர்க்கப்படும் காய்கறிகளையும் மற்றும் மூலிகைச் செடிகளையும் மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி இயக்குனர் சாந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் ஆகியோர் உடன் உள்ளனர்.