tamilnadu

img

காவலர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு.....

விருதுநகர்;
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால்  நடத்தப்படும் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்,  சிறைக்காவலர்கள், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தேர்வாளர்கள்   கலந்து கொண்டனர். விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த சங்கர்ராஜ் மகன் மாரிமுத்து (21) தேர்வில் கலந்து கொண்டு, 1,500 மீட்டர் தகுதி ஓட்டத்தில்  ஓடிக் கெண்டிருந்த திடீரென  மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு, பரிசோதனை செய்து ஆம்புலன்ஸ் மூலம்  விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத்  தெரிவித்தனர்.  இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

;