districts

img

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு : 4 பேருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்....

ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகரில் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

சிபிசிஐடி கைது செய்த ஹரிஹரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் போதை மாத்திரை, போதை ஊசிகளை கைப்பற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடியின் 6 நாள் விசாரணை முடிந்த நிலையில், இன்று 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 8 பேருக்கு மட்டுமே இதில் தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ள நிலையில், ஹரிஹரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதாவது 4 பேருக்கும் வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் என்றும் 18-ஆம் தேதி  4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

;