tamilnadu

img

உதவித் தொகையை தீக்கதிர் சந்தாவுக்கு வழங்கிய கட்சி உறுப்பினர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:
இராசபாளையம் நகர் சஞ்சீவிநாதபுரம் கட்சி கிளை சார்பில் ஊரடங்கு பாதிப்பையொட்டி கட்சி கிளை உறுப்பினர்கள் 9 பேருக்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது. பே.குருசாமிக்கும் வழங்கப்பட்டது அவர் எனக்கும் , எனது மனைவிக்கும் உதவித்தொகை ரூ 2,000 கிடைக்கிறது. எனவே இப்பணத்தை எனது சார்பில் தீக்கதிர் சந்தாவுக்கு வழங்குகிறேன் என்று கூறி கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுணனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுனன், நகரச் செயலாளர் பி. மாரியப்பன், மாவட்டக்குழு பிரசாந்த்,நகர் குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராமசுப்பிரமணியம், கிளைச் செயலாளர் ஜெயராமன் மற்றும் பால் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

;