tamilnadu

img

விருதுநகர் நத்தம்பட்டி காவல்நிலையத்தில் மேலும் 5 போலீசாருக்கு கொரோனா.... 

ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே கொல்லம் சாலையில் உள்ள பகுதியான நத்தம்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி விருதுநகர் மாவட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.      
விருதுநகரில் இதுவரை 614 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகியுள்ள நிலையில், 248 பேர் குணமடைந்துள்ளனர்.   

;