வேலூர், அக்.26- வேலூரில் வாகனத் தணிக்கையின்போது பெண் ஒருவரை மிரட்டி செல்போன் எண்ணை வாங்கி இரவில் அவருக்கு ஆபாச வீடி யோக்களை அனுப்பிய தாகக் கூறப்படும் போக்கு வரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜமாணிக்கம். சில தினங்களுக்கு முன் வாகனத் தணிக்கையின் போது, இருசக்கர வாக னத்தில் தனது மகனுடன் வந்த பெண் ஒருவரிடம் வாக னத்தின் ஆவணங்களைக் கேட்டுள்ளார். ஆவணங்கள் சரியாக இருந்த நிலையில், வண்டி யின் சைலன்சர் விதிமுறை களுக்குப் புறம்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குபோடப் போவதாக மிரட்டியுள்ளாராம். பின்னர் அப்பெண்ணையும் அவரது மகனையும் காவல் நிலை யம் அழைத்துச் சென்று, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்த அவர், பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளார். செல்போன் எண்ணை வாங்கியதில் இருந்து குட் நைட், குட் மார்னிங் என குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்த ராஜமாணிக்கம், வெள்ளிக் கிழமை நள்ளிரவு அவருக்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியதாகக் கூறப்படு கிறது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது உறவினர்களி டம் முறையிட்டுள்ளார். இத னையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள், பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக் கத்தை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர். முதலில் தான் அவ்வாறு வீடியோ அனுப்ப வில்லை என மறுத்த உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், வீடியோ ஆதாரத்தை காட்டியவுடன் அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லானதை அடுத்து, போக்கு வரத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.