tamilnadu

img

வாலாஜா நகராட்சி சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர், ஆக. 24- வாலாஜா நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலாஜா நகராட்சி நூறு ஆண்டு களுக்கு மேல் பழைமை வாய்ந்த நகராட்சி் நிர்வாகமாகும். இந்த நகராட்சியில் கடந்த  2 ஆண்டாக ஆணையர், தட்டச்சர் (டைப்பிஸ்ட்) உள்ளிட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் சீராமைக்காமல் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குப்பைகளை முறையாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆணையர் உள்ளிட்ட பணி யிடங்களை நிரப்ப வேண்டும், கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ அசேன் தலைமை தாங்கி னார். நகரமன்ற முன்னாள் தலைவர் நித்தி யானந்தம், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் தா.வெங்கடேசன், நகரச் செயலா ளர்கள் ஆர்.ரேணு, ஆர்.காளப்பன், நிலவு  குப்புசாமி உள்ளிட்டு மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.