tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கித் தொகையை தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கித் தொகையை தீபாவளிக்கு முன்பாக வழங்க வலியுறுத்தி தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக திங்களன்று(அக்.14)அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்  தலைவர் ஸ்ரீதரன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஏ.செந்தில் நாதன், தமிழ்மணி, சிரஞ்சீவி, பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.