tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

பாரம்பரிய நிலையமாகுமா வாலாஜா ரோடு ரயில் நிலையம்?
வேலூர், ஜூலை 30-“100 ஆண்டு பழைமைவாய்ந்த வாலாஜா ரோடு ரயில்  நிலையத்தை ‘பி’ கிரேடு ரயில் நிலையமாக தரம் உயர்த்தி டபுள்  டக்கர் விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று  செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மாநிலங்க ளவை உறுப்பினர் அ.முகமதுஜானிடம் ரயில் உபயோ கிப்பாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.  தென் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப் பட்ட பழைமையான ரயில் நிலையம் வாலாஜா  ரோடு ரயில் நிலையம். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய  ரயில் நிலையங்களில் ஒன்றாக இந்த ரயில் நிலையம் திகழ்கிறது.  இந்த ரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் ரூ. 8.50 கோடிக்கு  வருவாய் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக, சென்னை ரயில்வே கோட்டத் தில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய முக்கிய  ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் இந்த ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பயணிகளுக்குப் பயன்படாமல் பெயரளவில் மட்டுமே உள்ளது. அதேபோல் சென்னை- பழனி விரைவு ரயில், சென்னை-  பெங்களூரு டபுள் டக்கர் விரைவு ரயில், கோவை இன்டர்சிட்டி  விரைவு ரயில், சென்ட்ரல் விரைவு ரயில், சாய் நகர் வாராந்திர  விரைவு ரயில், சபரிமலை சிறப்பு ரயில்கள் ஆகியவை வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.  இந்த ரயில் நிலையத்தை ‘பி ’ கிரேடு ரயில் நிலையமாக தரம் உயர்த்தவும், பாரம்பரிய ரயில் நிலையமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என நலச் சங்கத் தலைவர் எஸ்.ஜெயப்பிரகாஷ், செயலர் எம்.இளம்பரிதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வேலூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க  215 நுண் பார்வையாளர்கள்
வேலூர், ஜூலை 30-வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடை பெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் சுதம் பந்தரிநாத் காதே, காவல்துறை பார்வையாளர் ஆதித்யா குமார் ஆகியோர் பேசியதாவது: வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 169 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 215 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆகஸ்ட் 4ஆம் தேதியே தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்று விட வேண்டும். தேர்தல் நடைபெறும் போது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், அந்த வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றனர்.