வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளர்கள் பலி
வேலூர், ஜூன் 13- ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனிக்கு வடசேரி, வடகரை, ஈச்சம்பட்டு, சின்னபள்ளிப்குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து பெண் தொழிலாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வழக்கம் போல வேனில் வேலைக்குச் சென்றனர். மணியாரகுப்பம் பகுதியில் எதிரே சென்றவர் மீது மோதாமல் இருக்க, திடீரென பிரேக் போட்டதாகக் கூறப்படு கிறது. இதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தி லுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடகரை பகுதியைச் சேர்ந்த சிவகாமி (50), மேல்ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த உஷா (37) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காய மடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் காவல் துணைகண் காணிப்பாளர் சக்திதானந்தன் மற்றும் உமாராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மாநில அளவிலான செஸ் போட்டிகள் காஞ்சிபுரம் விக்னேஷ் முதலிடம்
தூத்துக்குடி, ஜூன் 13- தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டிகள், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் நடைபெற்றன. ராபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுக ளில் போட்டிகள் நடைபெற்றன. முதல் நாள் போட்டியை காமராஜ் கல்லூரி முதல்வர் து. நாகராஜனும், இரண்டாம் நாள் போட்டியை மாவட்ட நீதிபதி செல்வமும் தொடங்கி வைத்தனர். போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். ராபிட் பிரிவு போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் முதலிடத்தையும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லோகேஷ் இரண்டாமிடத்தையும், மதுரையைச் சேர்ந்த கணேஷ்பாபு மூன்றாமிடத்தையும் பிடித்தனர். பிளிட்ஸ் பிரிவு போட்டியில் காஞ்சிபுரம் விக்னேஷ் முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த பிரசன்னா இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி சுகந்தன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நீதிபதி செல்வம், சர்வதேசநடுவர்கள் ஆர். அனந்தராம், ஏப்ரேம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மண்டல மேலாளர் ஜெ. மோகன்ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். நிகழ்ச்சியில், மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் ஜோ.பிரகாஷ், செயலர் கற்பகவல்லி,துணைத் தலைவர் செந்தில்கண்ணன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.