வேலூர் - ஆற்காடு சாலை, எல்ஐசி அலுவலகம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதால் கழிவு நீர் முழுவதும் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏறபட்டுள்ளது. இது குறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் உடனடியாக குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.