tamilnadu

img

ஊரடங்கும் அதிகரித்து வரும் வேலையின்மையும்

“கொரோனா வைரஸ் காரணமாக ஆறு வார ஊரடங்கு நீடித்து வரும் நிலையில்,  வேலையின்மை விகிதம் 2020 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 23.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது முந்தைய மார்ச் மாதத்தில் 8.7 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது” திங்க்-டேங்க் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்திய பொருளாதாரம் (சிஎம்ஐஇ) என்ற ஆய்வு நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டு முதல் கணக் கெடுப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது 2020, ஏப்ரல் மாத இந்தியாவில் வேலையின்மை விகிதம் 23.5 சதவீதமாகவும், நகர்ப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.95 சதவீதமாகவும், கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் 22.89 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.

மாநில வாரியாக வேலையின்மை விகிதம்

பரவலாக வேறுபட்டுகிறது. அதில் புதுச்சேரியில் அதிக அளவிலான வேலையின்மை விகிதம் 75.8 சதவீதமாகவும், தமிழ் நாட்டில் 49 சதவீதமாகவும், ஜார்கண்டில் 47.1 சதவீதமாகவும் பீகாரில் 46.6 சதவீதமாகவும், ஹரியானாவில் 43.2 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் (2.2 சதவீதம்),  சிக்கிம் (2.3), பஞ்சாப் (2.9), சத்தீஸ்கர் (3.4), தெலுங்கானா (6.2) மற்றும் உத்தராகண்ட் (6.5 சதவீதம் ) ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், மார்ச்  கடைசி வாரத்திலும், ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும், வேலையின்மை விகிதம் 23-24 சதவீதமாக இருந்தது. முதல் வாரத்தில் இது 23.8 சதவீதமாக இருந்தது, இரண்டாவது வாரத்தில்  இது சற்று குறைந்து 23.4 சதவீதமாக இருந்தது.

ஆனால் மூன்றாவது வாரத்தில் அது 24 சதவீதமாக உயர்ந்தது. இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில்  26.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சி.எம்.ஐ.இ தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய ஊரடங்கு காரணமாக 7.2 கோடி தொழிலாளர்களை  வெளியேறவில்லை,  மேலும் 8.5 கோடி வேலை யில்லாத தொழிலாளர் களை உருவாக்கி விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கட்டுரையாளர்: வழக்கறிஞர், புதுச்சேரி