tamilnadu

img

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்குக

வேலூர், பிப். 16- வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் பேர வைக் கூட்டம் அம்முண்டி யில் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராஜானந்தம் வரவேற்றார். பேரவையை மாநிலச் செயலாளர் பெரு மாள் துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாளர் கே.சாமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார். புதிய தலைவராக ஸ்ரீதரன், செயலாளராக ராஜானந்தம், பொருளாள ராக பழனி உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 2019-20ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு கரும்புக்கு ரூ.2612.50 என விலை நிர்ணயித்துள்ளது. மாநில அரசு அந்த விலையுடன் ஊக்கத்தொகை யாக ரூ.400 சேர்த்து வழங்க வேண்டும், மத்திய மாநில  அரசுகள் 2020-21ஆம் ஆண்டுக்கு கரும்பு டன்  ஒன்றுக்கு ரூபாய் 4,500  விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேலூர் கூட்டு றவு சர்க்கரை ஆலையோடு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளை மேம்படுத்த மத்திய அரசிட மிருந்து சிறப்பு நிதியை தமிழக அரசு பெற நட வடிக்கை எடுக்க வேண்டும், மாநிலம் முழுவதும் கரும்பு வெட்டுவதற்கு ஒரே கூலியை நிர்ணயம் செய்ய அரசு, ஆலை நிர்வாகம் விவசாயிகள் கொண்ட முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.