tamilnadu

img

பாரத ஸ்டேட் வங்கி,  விவசாயிகள் சந்திப்பு

 வேலூர், ஆக. 24- பாரத ஸ்டேட் வங்கி ஆற்காடு கிளை, வேளாண்மைத்துறையுடன் இணைந்து விவசாயிகள் சந்திப்பு கூட்டம் வங்கிக் கிளை முதன்மை மேலாளர் ஜி.இன்பராசு தலைமையில் நடைபெற்றது. வங்கி ஆற்காடு கிளை துணை மேலாளர் வெ.ராஜதுரை வரவேற்றார். கூட்டத்தில் வங்கியின் கடன் திட்டங்களான தங்க நகைக்கடன், விவசாயம் பயிர்கடன், கறவை மாட்டு கடன், சொட்டு நீர் பாசனம், விவசாயம் சார்ந்த நடவு இயந்திரம், டிராக்டர், அறுவடை இயந்திரம், புதிய திட்டமான சொத்து முதலீட்டு கடன், சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடும், பெரு விவசாயிகளுக்கு 75 விழுக்காடும் மானியம் வழங்கும் திட்டத்தினையும், புதிய திட்டமான பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதிய திட்டம் குறித்தும் விளக்கப்பட்டன. இதில் முன்னோடி விவசாயி கே.எம்.பாலு, உழவர் உற்பத்தியா ளர் நிறுவனத் தலைவர் சம்பத், இயக்குநர் கணேசன், வேளாண்மைத்துறை அலுவலர் ஆ.லீலாவதி, ஆத்மா திட்ட மேலாளர்  ர.சீனிவாசக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் உ.வையாபுரி, எம்.வினோத் ஆகியோரும் பேசினர். ஸ்டேட் வங்கி வணிக தொடர்பா ளர்கள் தேவிகா, ரகுமான் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். . துணை வேளாண்மை அலுவலர் ஆர்.கண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் பயிர்க்கடன், பவர் டில்லர், கல்விக்கடன் போன்ற வற்றின் விண்ணப்பங்கள் 10 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டன