வேலூர், ஜூன் 9- வேலூர் மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதற்கான திட்ட வரைவு தயாரிப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக, வேலூர் கோட்டையைச் சுற்றி யுள்ள அகழியை தூர்வாரி அழகுப டுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 10.8 கோடிக்கு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. முதற்கட்டமாக, முட்புதர் களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் சகதிகள் அப்புறப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்தொடர்ச்சியாக, வேலூர் கோட்டை யின் வெளிப்புற மைதானத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ. 15 கோடி மதிப்பில் வண்ண விளக்கு அலங்காரமும், வேலூர் கோட்டை வரலாற்றைத் தெரிவிக்கும் ஒலி, ஒளி காட்சி அமைப்பும் செயல்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங் கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.