வேலூர்,அக்.3- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தற்காலிக அலுவலகத்துக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தனி அலுவலர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்தார். சிறப்பு தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடக்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கான தற்காலிக அலுவலகம் செயல்படத் தேவையான அரசு கட்டடங்கள் தேர்வு செய்து இறுதி செய்யப்பட்டு தமிழக அரசின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,” என்றார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம், வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.