tamilnadu

வடமேற்கு மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவு

வேலூர், ஆக.29-

     வேலூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகமும், இந்திய வானிலை  ஆய்வு மையமும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்து கால்நடை விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வு முகாம் திங்களன்று நடை பெற்றது. இந்த நிகழ்ச் சிக்கு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல் வர் ஆர்.கருணாகரன் தலைமை தாங்கினார். திட்ட  ஒருங்கிணைப்பாளர் தங்க. தமிழ் வாணன் வரவேற்றார்.

    இதில், பங்கேற்ற சென்னை மண்டல வானிலை  ஆய்வு மைய துணை பொது  இயக்குநர் சே.பாலச் சந்திரன் பங்கேற்று பேசும் போது, ‘‘ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற காற்று வீசும் திசை, அதன்போக்கு, வெப்ப நிலை, ஈரப் பதம் ஆகிய வற்றை அறிந்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வேளாண்மைக்கு உதவி செய்கிறோம்.

    இதனை, விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது, வளர்ந்து வரும்  தொழில் நுட்பத்தை வேளாண்மைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்கள், செயற்கைக் கோள் தரவுகள், ரேடார் மூலம் கிடைக்கப் பெற்று பகிரப்படுகின்றன. இதனை விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும்’’ என்றார்.

    பின்னர் சே.பாலச் சந்திரன், செய்தியாளர்க ளிடம் கூறும்போது, ‘‘தென்மேற்கு பருவமழை காலத் தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டில் இயல்பை விட 9 விழுக்காட்டிற்கும் குறைவான மழைப் பொழிவு  பதிவாகி இருக்கிறது. இருப்பினும், தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில்  இயல்பைவிட மிகவும் குறை வான மழை பதிவாகி யுள்ளது.

    குறிப்பாக, தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் 20 விழுக்காட்டிற்கும் குறைவான மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் மேகக் கூட்டங்கள் இல்லாத தால் காற்றின் ஈரப்பதம் குறைந்திருப்பதால் அதிகபட்ச வெப்ப நிலை  இயல்பை விட 4 டிகிரி  செல்சியஸ் அளவுக்கு  அதிகரித்து காணப்படுகி றது. அதிக வெப்ப நிலை யால் அவ்வப்போது ஏற்ப டும் இடி, மேகக் கூட்டங்க ளால் மழைப் பொழிவு இருக்கிறது.

    வானிலையை துல்லிய மாக கணக்கிட மாவட்டங்கள் தோறும் தானியங்கி மழை மானி பொருத்தப்பட்டதால் தற்போது 3 மணி நேரத்துக்கு  ஒரு முறை அல்லது 6 மணி  நேரத்துக்கு ஒருமுறை மழை நிலவரம் குறித்து  துல்லியமாக கணக்கிடப்படு கிறது’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் அந்துவன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி திட்ட தொழில் நுட்ப அலுவலர் திவ்ய லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.