tamilnadu

img

ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வனவிலங்கு பாதிப்புகளால் பயிர் சேதம் அடைந்த விவசாயி களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் பேருந்து நிலையம்  அருகில் சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, விசிக சார்பில் பி.குணசேகரன், துரை செல்வம், விடுதலை செழியன், வீராங்கன்  ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிபிஎம் தாலுகா செயலாளர் கே.சாமிநாதன் துவக்கி வைத்தும்,  இந்திய குடியரசு கட்சி மத்திய மாவட்டத் தலைவர் ரா.சி.தலித் குமார் நிறைவு செய்து பேசினார். சிபிஎம் நகரச் செய லாளர் பி.காத்தவராயன், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.