tamilnadu

இந்தியன் வங்கியின் கிளை மேலாளர்கள் கூட்டம்

வேலூர், ஆக.19- இந்தியன் வங்கியின் வேலூர் மண்டலக் கிளை மேலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வேலூரில் அண்மையில் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளுக்கான சீர்திருத் தங்களை முன்னெடுக்கவும், மத்திய அரசின் நிதிச் சேவைத் துறை வங்கிக்கிளை நிலையிலிருந்து புதிய, முற்றிலும் மாறு பட்ட,  வித்தியாசமான எண்ணங்கள் வங்கி யின் செயலாற்றல் ஆகியவற்றை உருவாக்க வும், இதன்மூலம் ஒட்டுமொத்த  வங்கித்துறை யானது நாட்டை 5 ட்ரில்லியன் டாலர்  என்ற பொருளாதார இலக்கை அடைவ தற்கான தனது  பங்களிப்பை செயல்படுத்திட வும் இந்தியன் வங்கி சார்பில் நாடு முழு வதும் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கப் பட்டுள்ளது. வேலூர் மண்டலம் சார்பில் நடை பெற்ற கிளை மேலாளர்கள், களப்பணி யாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. வங்கியின் செயல்  இயக்குநர் வி.வி.ஷெனாய்  கருத்தரங்கைத் தொடங்கி வைத்து நிகழ்ச்சியின் முக்கியத்து வத்தையும், பொதுத்துறை வங்கியின் முன்னேற்றம் குறித்தும் விளக்கினார்.  கிளை மேலாளர்கள் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து எடுத்துரைத்ததுடன், வங்கியின் சேவையை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.  முன்னதாக, மண்டல மேலாளர் வி.என்.மாயா வரவேற்றார். இதில், வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட இந்தியன் வங்கியின் 30க்கும் மேற்பட்ட கிளை மேலாளர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.  துணை மண்டல மேலாளர் ஜி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.