சென்னை, ஆக.10- வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலய வளாகத்தில் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று சென்னை மெரினாவில் உள்ள அண்ணா கலைஞர் நினைவிடங்களில் மரி யாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பெரி யார் திடலுக்குச் சென்று பெரியார் நினை விடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிட மும் வாழ்த்துப் பெற்றார். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டுக் குச் சென்றும் வாழ்த்துப்பெற்றார்.