tamilnadu

img

விஐடியில் ஆங்கில இலக்கிய சர்வதேச மாநாடு

வேலூர், ஆக. 25- ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பிப்பதில் புதுமைகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு - வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை வங்காள தேசத்தின் டாபோ டில் சர்வதேச பல்கலைக்கழ கத்தின் பேராசிரியர் முனை வர் பினாய் பர்மன் துவக்கி வைத்து பேசுகையில், தற்போதைய உலகில் அனைத்தும் கணிணி மயமாகி விட்டது. ஆங்கிலத்தின் மூலமே அனைத்து பரிவர்த்தனையும் நடைபெறுகிறது. ஆங்கிலம் இன்று உலகளவில் முக்கிய பங்கு வகுக்கிறது.மேலும் ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய முறை களை கையாண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும், அதை மாணவர்கள் திறம்பட பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகை யில், உலகின் பல்வேறு நாடு களுக்கு நாம் பயணிக்கும் போது அந்நாட்டு மக்களு டன் கலந்துரையாட ஆங்கில மொழி ஒரு பாலமாக உள்ளது. விஐடி வளா கத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் இருந்தும், உலகின் 55 நாடுகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் பயில்கின்ற னர். இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு ஆங்கில மொழி ஒரு கருவியாக பயன்படுவதாக கூறினார். ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தை கற்றுக் கொள்ளும் புதிய முறைகள் குறித்து கலந்துரையாட ப்பட்டது. வங்காள தேசம், ஒமன், சிரியா மற்றும் மலேசியாவை சார்ந்த பேராசிரியர்கள் உட்பட இந்தியாவின் 11 மாநிலத்தை சேர்ந்த பல்கலைக்கழகம், கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட பேரா சிரியர்கள் தங்களின் ஆராய்ச்சி படைப்புகளை சமர்ப்பித்தனர். இதில் வி ஐ டி பதிவாளர் முனைவர். கே.சத்திய நாராய ணன், சமூக அறிவியல் மற்றும் மொழிகளின் துறைத் தலைவர் முனைவர். ஜி.வேல்முருகன், ஆங்கில துறைத் தலைவர் முனைவர். சரிகா குப்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.