tamilnadu

img

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட உத்தரவு

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பராமரிப்பில் இல்லாத ஆழ்துளைகிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்  2 வயது ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  இச்சம்பவத்தின் எதிரொலியாக திறந்த நிலையில் உள்ளஅனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் ஆய்வு செய்து மூடுவதற்கு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதே போல் தேனி மாவட்டத்தில் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூட தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

;