tamilnadu

ராணிப்பேட்டையில் ஆலங்கட்டி மழை

வேலூர், மே 28-வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பலத்த காற்றுடன் ஆலங் கட்டி மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோடை வெயிலில் கடுமையான வெப்பத்தினால், பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்டாமல், வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். உடல் வெப்பத்தை தணிக்க குளிர் பானங்களை பருகி, தாகத்தை தணித்து கொண்டவர்களுக்கு இந்த மழை மகிழ்ச் சியை கொடுத்திருக்கிறது.

;