tamilnadu

img

சிஐடியு மாநாட்டுக்கு வேலூரில் நிதியளிப்பு

வேலூர், டிச. 2- 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடை பெறும் இந்திய தொழிற் சங்க மையத்தின் 16 வது  அகில இந்திய மாநாட்டு நிதி யளிப்புக் கூட்டம் வேலூரில் மாவட்டத் தலைவர் எம்பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு தமிழ் மாநில பொதுச் செய லாளர் ஜி சுகுமாறன், மாநில  துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டு நிதியாக வேலூர் மாவட்டக் குழு சார்பில் 1 லட்சத்து 88 ஆயி ரத்து 500, ரூபாயும், அரசு  போக்குவரத்து கழக ஊழி யர் சங்கத்தின் சார்பில் ரூ. 50,000 ஆக மொத்தம் ரூ. 2,38,500 த்தை வழங்கினர். மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் என்.காசிநாதன்,  மாவட்டப்  பொருளாளர் ஏ.பழனியப் பன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.குப்பு, பி.காத்தவராயன், வி.நாகேந்திரன், ஏ.பாபு உள்  ளிட்டோர் கலந்து கொண்ட னர்.