tamilnadu

காட்பாடி ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல்

வேலூர், ஜூன் 1-காட்பாடி ரயில் நிலையத்தில் கிடந்த பைகளில் இருந்து 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் முத்துப் பாண்டி, உதவி ஆய்வாளர் ரங்கநாதன்  தலைமையில் காவல் துறையினர்  காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர ரயில் கள் வந்து செல்லும் 5-ஆவது நடைமேடையில் பயணிகள் அமரும் நாற்காலியின் கீழே கேட்பாரற்று கிடந்த 2 பைகளை காவல்துறையினர்  சோதனை செய்தனர். அப்போது, அவற் றில் 25 கிலோ அளவுக்கு கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தப் பைகளை சோதனையிட்டுக் கொண்டிருந்தபோதே அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவர், காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடி ரயில் நிலையத்துக்கு வெளியே தயார் நிலையில் இருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றனராம். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் வேலூர் மாவட்ட போதைப் பொருள்கள் தடுப்பு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.இதுகுறித்து மாவட்ட போதைப் பொருள்கள் தடுப்பு, நுண்ணறிவுப் பிரிவுகாவல்துறையினர் கூறுகையில், “அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3.5 லட்சம் இருக்கும். ஆந்திரத்தில் இருந்து சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொழிலாளர்கள் அதிகமுள்ள மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கலாம்.இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.