tamilnadu

தீபாவளி: வேலூரிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள்

வேலூர்,அக்.23- தீபாவளியையொட்டி வேலூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக  200 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.  அந்தவகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பேருந்து கள் 24 ஆம் தேதி காலை முதல் 26 ஆம்  தேதி வரை இயக்கப்படும் என்றும், பொது மக்கள் இந்த சிறப்புப் பேருந்துகளை பயன்  படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதில், வேலூரில் இருந்து சென்னைக்கு  இயக்கப்படும் பேருந்துகள் கூட்டநெரிசல் காரணமாக பூந்தமல்லி வரை மட்டுமே  இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.