கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் சிஐடியு புகார்
கடலூர், ஜூன் 18- கடலூர் மாவட்டம் சி.என். பாளையம் பகுதியில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் நடப்பாண்டில் இலவச பள்ளி சீருடை உற்பத்திக்காக இதுவரை நெசவாளர்களுக்கு நூல் வழங்கவில்லை. இலவச வேட்டி சேலை உற்பத்திக்கும் நூல் வழங்கவில்லை. இதனால் பல லட்சக்க ணக்கான ரூபாய் வட்டிக்கு வாங்கி பெடல் தறி அமைத்தும் வேலை இல்லாமல் கைத்தறி நெசவாளர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நிலைமை இவ்வாறிருக்க கைத்தறி கூட்டுறவு சங்கங்க ளில் பள்ளி சீருடை மற்றும் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு நூல் வழங்கப் பட்டு உற்பத்தி செய்யப்பட்ட தாக போலி கணக்கு எழுதி முறைகேட்டில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நெசவாளர்களுக்கு கூலி பாக்கித் தொகையை வழங்க மறுத்து வருகின்றனர். எனவே இந்த பிரச்சனையில் தலையிட்டு கூலி பாக்கியை வழங்கிடவும், 40 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வேண்டும் எனவும், பெடல் தறிக்கு நூல் மற்றும் இடுபொருட்கள் தொடர்ந்து கிடைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சங்க நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கைத்தறி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். தட்சிணா மூர்த்தி, பெடல் தறி சங்கத்தின் தலைவர் ஜி.கணேசன், செய லாளர் எஸ்.சம்பத், பொருளாளர் எஸ்.முருகவேல், துணைத் தலைவர் எஸ்.விநாயகம், மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
ஆட்டோ ஓட்டுநருக்கு காவல்துறை பாராட்டு
வேலூர், ஜூன் 18- ராணிப்பேட்டையை அடுத்த நாவல்பூர் வள்ளலார் பாரதி யார் தெருவைச் சேர்ந்தவர் தினகரன். ஆட்டோ ஓட்டுநர். இவ ரது ஆட்டோவில் ராணிப்பேட்டை காரை மேட்டுத் தெருவைச் சேர்ந்த சிவா, மீனா தம்பதியினர் கடந்த சனிக்கிழமை ராணிப் பேட்டை முத்துக்கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றனர். வீட்டில் இறங்கிய அவர்கள் கொண்டு வந்த ஒரு பையை அந்த ஆட்டோவிலேயே தவறவிட்டனர். முத்துக்கடைக்கு திரும்பி வந்த தினகரன் ஆட்டோவில் கிடந்த பையை எடுத்து திறந்து பார்த்துள்ளார். அதில் தங்க டாலர் செயின், மோதிரம் உட்பட 5 சவரன் நகை, ரூ.1,000 பணம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் அந்த பையை ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆட்டோ ஓட்டுநர் தினகரனை பாராட்டினார்.
பிஎம்சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை
கிருஷ்ணகிரி, ஜூன் 18- பிஎம்சி டெக் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி யில் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் அறங்காவலர் மலர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிறுவனர் தலை வர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் குமார் வாழ்த்திப் பேசினார். சென்னை ரெலஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் ரகுநாத் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டார். ஐடிஐ மற்றும் பாலி டெக்னிகின் இயக்குந முதல் வார் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரமணியம் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.