tamilnadu

விபத்தில் பலியான வியாபாரி: இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

வேலூர், ஜூன் 5-வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45), அரிசி வியாபாரி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு வேலை முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.வேலூர் சாய்நாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே திருவண்ணாமலையிலிருந்து வந்த அரசு பேருந்து  சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் காவல்துறையினர்   வழக்குப் பதிவு செய்தனர்.விபத்தில் பலியான வெங்கடேசன் குடும் பத்தினர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி வெற்றிச் செல்வி, விபத்து இழப்பீடாக வெங்கடேசன் குடும்பத்திற்கு ரூ.13 லட்சத்து 22 ஆயிரத்து 780-ஐ வழங்கும் படி திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.ஆனால் அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை  ஜப்தி செய்யும்படி நீதிபதி வெற்றிச் செல்வி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் வேலூர் புதிய பேருந்து  நிலையத்துக்கு வந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக வந்தவாசிக்கு செல்லும் திருவண்ணாமலை மண் டல அரசு போக்குவரத்துக்கழக பேருந்து வந்தது. அந்த பேருந்தை கோர்ட்டு ஊழியர் கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பேருந்தை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. இதையறிந்த அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 3 நாட்களுக்குள் விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழங்கினர். அதைத்தொடர்ந்து பேருந்து விடுவிக்கப்பட்டது.