tamilnadu

img

50 ஆயிரம் லஞ்சம்: துணை ஆட்சியர் கைது

வேலூர், பிப். 29- 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்,  கணக்கில் வராத 2  லட்சத்து 44 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்கு மார்  நிலத்தை கிரயம் செய்தபோது பத்தி ரம் நிலத்தின் மதிப்பை காட்டிலும் முத்திரை தாள் கட்டணத்திற்கு குறை வாக பணம் செலுத்தியதாகவும், ஆகவே இதை விசாரிக்க கண்ணமங்கலம் சார்பதிவாளர் வேலூரில் உள்ள தனி துணை ஆட்சியர் தினகரனுக்கு (முத்திரை) பரிந்துரை செய்துள்ளார். அதன்படி ரஞ்சித்குமாரின் பத்தி ரத்தை விடுவிக்க வேலூர், திருவண்ணாமலை மாவட்ட தனி  துணை ஆட்சியர் (முத்திரை) தினகரன் லஞ்சம் கேட்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் ரஞ்சித்குமார் புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் 50,000 மதிப்பி லான ரசாயம் தடவிய பணத்தை ரஞ்சித்குமாரிடம் கொடுத்து  அனுப்பியுள்ளனர். இதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைத்து தனிதுணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரனிடம்  கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு  துறையினர் பிடிக்க முற்பட்டுள்ளனர்.  அப்போது அதிகாரி தினகரன் காரில் தப்ப முயன்றுள்ளார். அவரை விரட்டிச்சென்று பிடித்து பின்னர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அழைத்து வந்து விடிய விடிய நடத்திய சோத னையில் தினகரன் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத  1 லட்சத்தி 94 ஆயிரம் ரொக்கம் மற்றும் லஞ்சப்பணம் 50 ஆயி ரம் என மொத்தம் 2 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாய் பணத்தை  பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறையினைர் தனி துணை ஆட்சியர் (முத்திரை) தினகரன் மற்றும் அவரது  ஓட்டுநர் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக  தினகரன் பணியிட  மாற்றம் செய்த பின்னரும் மாறுதலாகாமல் லஞ்சம் வாங்கி யிருப்பது குறிப்பிடத்தக்கது.