வாஷிங்டன்:
கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பல மாதங்களுக்கு நீடித்திருக்கும் என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருடைய உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அந்த எதிர்ப்புசக்தி இருக்கிறவரையில், மீண்டும் கொரோனா வருவது தடுக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிரானநோய் எதிர்ப்புச்சக்தி , நோய் தொற்றுக்கு பிறகு விரைவாக குறைய வாய்ப்பு உள்ளது என்று இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி பலமாதங்கள் நீடிக்கும் என்று அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளரான அரிசோனா பல்கலைக்கழக பேரா
சிரியர் தீப்தா பட்டாச்சார்யா கண்டுபிடித் துள்ளார்.
இது தொடர்பான ஆய்வை அவர் ,பேராசிரியர் ஜாங்கோ நிகோலிச் ஜூகிச்சுடன் நடத்தி அதன் முடிவுகளை இம்யூனிட்டி பத்திரிகையில் வெளியிட்டுள் ளார்.இதற்கான ஆய்வில் கொரோனாபாதித்த 6 ஆயிரம் பேர் பயன்படுத்தப்பட் டுள்ளனர்.இதுபற்றி பேராசிரியர் தீப்தா பட்டாச்சார்யா கூறுகையில், கொரோனாவுக்கு எதிரான தரமான நோய் எதிர்ப்புசக்தி, கொரோனா தொற்று பாதித்த 7 மாதங்களுக்கு பிறகும் கூட உற்பத்தி செய்யப்படுவதை பார்த்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தி நீண்ட காலம் நீடிக்காது என பலரும் கவலை தெரிவித்திருந்தனர். ஆனால்நாங்கள் இது தொடர்பாக ஆராய்ந்தபோது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது 5 மாதங்கள் நிலைத்து இருப்பதை கண்டறிந்தோம்.வைரஸ் தொற்று எப்போது முதன்முதலாக செல்களை பாதிக்கிறதோ, அப் போது நோய் எதிர்ப்பு அமைப்பு வைரசைஎதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் குறுகிய கால பிளாஸ்மா செல்களை வரிசைப்படுத்துகிறது. இவை, தொற்று பாதித்த 14 நாட்களுக் குள் ரத்த பரிசோதனை செய்கிறபோது, காணப்படுகின்றன.இரண்டாவது கட்ட நோய் எதிர்ப்பு மறுமொழியாக, நீண்ட கால பிளாஸ்மா செல்கள் உருவாகின்றன. அவை தரம் வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இவைதான் பல மாதங் கள் நீடிக்கின்றன.கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது 5 முதல் 7 மாதங்கள் வரை ரத்த பரிசோதனையில் சாத்தியமான அளவுகளில் இருப்பதை கண்டறிந்தோம். நோய் எதிர்ப்புச்சக்தி இன்னும் அதிக காலம் நீடிக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.