tamilnadu

img

வியட்நாமில் சுறாவளி புயல்: 136பேர் பலி

வியட்நாமில் ஏற்பட்ட சூறாவளி புயல் வெள்ளம் காரணமாக 136 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வியட்நாமில் மோலேவே என்ற புயல் கடுமையாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட பலத்த மழையால் பல மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 
பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குயங்னம் மாகாணமும்  தற்போது நிலச்சரிவில் சிக்கி உள்ளது. இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக்கூரைகள் சேதமடைந்திருக்கிறது. 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இந்த சூறாவளியால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளது.