tamilnadu

img

விழுப்புரம் பாஜக தலைவர் மீது பாலியல் புகார் அளித்த மகளிரணி செயலாளர் நீக்கமாம்

விழுப்புரம் பாஜக தலைவர் மீது பாலியல் புகார் அளித்த மகளிரணி செயலாளர் நீக்கமாம்
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது பாலியல் புகார் அளித்த மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பாஜக மாவட்டத்தலைவர் கலிவரதன் அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் காயத்திரியிடம் பாலியல் வன்முறை, கொலை மிரட்டல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த காயத்திரி கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் விஏடி கலிவரதன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி என்னிடம் 5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். இதை வெளியே சொன்னால் என்னையும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் என்றார்.
இந்நிலையில் இன்று பாஜக மாநிலத்தவைர் எல்.முருகனின் ஒப்புதலோடு கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் தெரிவித்துள்ளார். 

;