விழுப்புரம், செப்.30- அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி விக்கிர வாண்டி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி திங்களன்று (செப்.30) தேர்தல் அலுவலர் சந்திரசேகர னிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ். ஜெகத்ரட்சகன் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பர சன், எம்பி துரை.ரவிக்குமார், சிபிஎம் முன் னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவ ணன், விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, மற்றும் காங்கிரஸ், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் தமது மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசனி டம் வழங்கினார். அவருடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதிமுக
நாங்குநேரியில் அதிமுக சார்பில் போட்டி யிடும் நாராயணன் தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசனிடம் வழங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஒன்றிய அதிமுகச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும் வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உடனிருந்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் பிரதேச தலைவர் நமச்சிவாயம்,திமுக தெற்கு பகுதி அமைப்பாளர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் விசுவநாதன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அதி காரி முகமதுமன்சூரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.