வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுரோடு, கல்லுக்கோட்டை, செண்டுவழி, பண்ணைப்பட்டி, சிக்கனம்பட்டி, ஆத்தூர்பிள்ளையூர், கரையாம்பட்டி, தோப்பூர், வைவேஸ் புரம், பள்ளிக்குடத்தான்புதூர், சவரியார்பட்டி, செங்கோட்டைப் பட்டி உள்ளிட்ட ஊர்களில் மானாவாரியாக ஆடி மாதம் பயிரிட்ட கடலை, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் பருவமழையை நம்பி பயிரிட்டு மழை பெய்யாததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டு பயிர்கள் கருகி வருகிறது. இது குறித்து வேடசந்தூர் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்வேடசந்தூர் ஒன்றிய துணைத் தலைவர் சவடமுத்து தலைமையில் விவசாயிகள் வேடசந்தூர்வேளாண்துறை அலுவலகத் திற்கு திரண்டு வந்தனர். அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அலுவலகம் முன்பு தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்சியரிடமும் மனு
போராட்டத்திற்கு தலைமையேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச்செயலாளர் சவடமுத்து கூறுகையில், காய்ந்து போன கடலை, மக்காச்சோளம், உளுந்து, செங்காந்தல் மலர் கள், காணப் பயிர்களுக்கு வறட்சிநிவாரணம் வழங்க அரசு முன் வரவேண்டும். நாகையகோட்டை கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. நிரந்தமாக கிராம நிர்வாக அலுவலர்நியமித்து காய்ந்த பயிர்களை கிராமக் கணக்கில் ஏற்ற வேண் டும். மயில்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.இது தொடர்பாக மாவட்டஆட்சியர் மு.விஜயலெட்சுமியிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.