tamilnadu

img

கல்லூரி மாணவிக்கு அரசு பேருந்தில் பாலியல் தொல்லை - நடத்துனர் கைது  

அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

விழுப்புரம் அருகிலுள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான 20 வயதான கல்லூரி மாணவி. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் நேற்று இரவு சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றபோது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார். இதனை கவனித்த நடத்துனர் சிலம்பரசன் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்ததையடுத்து, காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காணை காவல்நிலைய போலீசார் அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நடத்துனரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த அரசு பேருந்து ஓட்டுனர் அன்புச்செல்வனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.