விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கணவரை இழந்த பெண்கள் விதவைச் சான்று கோரி இ-சேவை மையம் மூலம்விண்ணப்பித்து ஒரு மாத காலம் ஆகியும் பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வருவாய்த்துறை அலுவலர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகியஇடங்களில் கோட்டாட்சியர் அலுவலகங்களும், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, வெம்பக் கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் பத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன.கடந்த காலங்களில் வருமானச் சான்று, சாதிச் சான்று, விதவைச் சான்றுமற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவைகளைப் பெற நேரடியாக மனுக் களை வாங்கி, அதை நிரப்பி, கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்துப் பெற வேண்டும். வருவாய் வட்டாட்சியர் கையொப்பமிட்ட பின்பே சான்றிதழ்பெற முடியும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இ-சேவை மையங்கள் மூலம்விண்ணப்பிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை மக்கள் காலதாமதமின்றி மட்டுமல்லாது லஞ்சம் ஏதுமின்றி சான்றிதழ்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்து. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60 முதல்ரூ.120 வரை கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது. வருமானச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தவுடன், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய்அலுவலரை நேரில் சந்திக்க வேண்டுமாம். “அவர்கள் கேட்பதை” கொடுக்க வேண்டும். அல்லது வருமான சான்றிதழில் கூடுதல் வருமானம் போட்டு சான்றிதழ் வழங்கப்படும். இலவச வீட்டு மனைப்பட்டா, ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் ஆகியவற்றிற்காக விண் ணப்பம் தருவோரிடம் “அன்பளிப்புகள்” கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணவரை இழந்து தவிக்கும் விதவைப் பெண்கள், தங்களுக்கு உதவித்தொகை பெறுவதற்காக விதவைச்சான்று கேட்டு ஆன்-லைனில் விண் ணப்பிக்கின்றனர். ஒரு மாதமானாலும் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. அவர்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இச்சேவை குறித்து புகார்தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண்ணில் (18004251333) கேட்டபோது, சான்றிதழ் இருக்கும் நிலையை மட்டும் குறிப்பிடுவதோடு, சம்பந்தப் பட்ட அதிகாரியை நேரில் சென்று பாருங்கள் என ஆலோசனை கூறுகின்றனர். இதனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ளஇந்தத் திட்டமே கேள்விக் குறியாகி உள்ளது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர், இ-சேவை மூலம் விண்ணப்பிக்கும் மக்களுக்கு காலதாமதமின்றி சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, காலம் தாழ்த்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.