எல்.ஐ.சி தனது புதிய ஒத்திவைக் கப்பட்ட வருடாந்திர திட்டமான ‘ஜீவன் சாந்தி”- யை அறிமுகப்படுத்துகிறது.
**********
நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டிவிட்டருக்கு மத்திய அரசுஎச்சரிக்கை விடுத்துள்ளது.
**********
பண்டிகை நாட்கள் வருவதையொட்டி சென்னையில் மெட்ரோரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
**********
இந்திய கடற்படையில் கடல்சார்உளவுப் பணிக்காக டார்னியர்விமானத்தை இயக்கும் வகையில் முதன்முதலாக 3 பெண் விமானிகள் அடங்கிய முதல் குழு தயாராகியுள்ளது.
**********
புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
**********
ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, 5 புதிய வகை இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
**********
பணம் செலுத்தும் நிறுவனங்களுக்கு இயங்கக்கூடிய க்யூஆர் குறியீடு அவசியம் என்று ரிசர்வ் வங்கிஆணையிட்டுள்ளது.
**********
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குச் செல்லஅக்டோபர் 23 ஆம் தேதி முதல்சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதாக தருமபுரி மாவட்டஆட்சியர் மலர்விழி தெரிவித்துள் ளார்.
**********
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
**********
நடிகர்களின் சம்பளக் குறைப்புகுறித்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். இதில் தலையிடுவதற்கு அரசுக்குமுகாந்திரம் இல்லை என்று செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.