tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

விருதுநகர்:
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்டது  பாத்திமாநகர். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பொது மக்களுக்கு 3 வது நாளாக  தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர்  எல்.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்  பி.ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், நகர்குழு உறுப்பினர் பி.ராஜா, டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர்.   பொது மக்கள் ஆர்வத்துடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கபசுர குடிநீரை வாங்கிப் பருகினர்
 

;