tamilnadu

img

அருப்புக்கோட்டையில் கார் - லாரி மோதல்... பெண் பலி  

விருதுநகர்: 
ஞானராஜ் - ஜோஸ்மின்மேரி தம்பதியர் காரில் கோவிலுக்குச் செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி நான்கு வழிச்சாலையில் (மதுரை - தூத்துக்குடி) வந்து கொண்டிருந்தனர். 

விருதுநகர் மாவட்டம் உள்ள அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி விலக்கு அருகே வந்த பொழுது காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் நான்கு வழிச்சாலையில் அங்கு இங்குமாக சென்று தடுப்புச்சுவரில் தாண்டி மறுபக்க சாலைக்குச் சென்று தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த ஜோஸ்மின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோஸ்மின்மேரியின் கணவர் ஞானராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஜோஸ்மின்மேரி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 

;